ks-chitra-trending-viral-post-play-back-singer-tamil-malayalam-kannada

சின்னக்குயில் சித்ராவின் வாழ்க்கை பயணங்கள்

சின்னக்குயில் சித்ரா:-

இந்தியாவின் திரைப்படத்துறையில் ‘சின்னக்குயில்’ என அழைக்கப்படும் கே.எஸ்.சித்ரா அவர்கள் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். இவர் தனது இனிமையான குரலால் உலகெங்கும் உள்ள மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ளார் என்றால் அது மிகையல்ல. இவரது ரசிகர்கள் இவரை “சின்னக்குயில்” , “வானம்பாடி” , “கானக்குயில்” என பல்வேறு சிறப்பு பெயர்களால் செல்லமாக அழைப்பதுண்டு. இவர் தமிழ் மட்டுமன்றி இந்தி, மலையாளம், கன்னடம் , தெலுங்கு ,அசாமிய, ஒரியா, வங்காளம் போன்ற பலவகையான இந்திய மொழிகளில் பாடி வருகிறார்.

சித்ராவின் குடும்பம்:-

1963ஆம் ஆண்டு இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில், ஜூலை மாதம் 27 ஆம் தேதி கிருஷ்ணன் நாயர் என்பவருக்கும், சாந்தகுமாரிக்கும் மகளாக ஒரு இசை குடும்பத்தில் பிறந்தார். சித்ராவின் தந்தை வானொலியில் புகழ்பெற்ற பாடகராகவும், தாயார் சாந்தகுமாரி வீணைக் கலையில் சிறந்தும் விளங்கியவர்கள்.

இவரின் உடன்பிறந்த சகோதரியான பீனா, இனிமையான குரல் வளத்தைக் கொண்டிருந்தார். கிருஷ்ணன் நாயருடைய துணைவியார் ஒரு பள்ளியில் இசையும் கற்பித்து வந்தார். சித்ரா தன் சிறிய வயதிலேயே பாடல்களை நினைவில் கொண்டு பாடினார். சிறுவயதிலேயே தனக்கென்று தனித் திறமையை வளர்த்துக்கொண்ட சித்ரா ஐந்து வயதிலேயே அகில இந்திய வானொலியில் சங்கீதத்தில் சிலவரிகள் பாடினார். மேலும், இவரின் தந்தையான கிருஷ்ணன் நாயர், சித்ராவுக்கு சங்கீதம் மற்றும் இசைப் பயிற்சிகளைக் கற்றுத்தந்து, அவருக்கு முதல் ஆசானாக விளங்கினார். பின்னர் பி.ஏ இளங்கலைப் படிப்பில் இசைத் துறையில் முதல் வகுப்பில் தேர்ச்சிப்பெற்று, கேரள பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் படிப்பை தொடர்ந்து இசைத் துறையில் எம்.ஏ பட்டம் பெற்றார்.

சித்ராவின் இசைப் பயிற்சி:-

சித்ரா பள்ளியில் பயின்ற காலத்திலேயே இவரின் தம் மகளுக்காக தேசிய அளவில் திறமை வாய்ந்தோருக்கான உதவித்தொகைக்கு பதிவு செய்தார். இதனைத்தொடர்ந்து நேர்முகத் தேர்வுக்கு சென்றிருந்த இவருக்கு இரண்டு வருடம் முறையாக சங்கீதம் கற்றிருக்க வேண்டும் என்று குழுவினர் வலியுறுத்தியபோதும், இவர் தனது பதிமூன்று வயதிலேயே தோடி ராகத்தின் சிக்கலான ஸ்வரங்களை சரியான இராகத்துடன் பாடி தம் தகுதியை நிரூபித்து ஏழாண்டுகளுக்கான உதவித்தொகையைப் பெற்றார். இதன் பிரகாரம் இவர் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாக இசை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார்.

இவர் இசை பயின்ற வந்த பேராசிரியர் ஓமண்ணக்குட்டியின் சகோதரர் எம். ஜி. ராதாகிருஷ்ணன் புது குரல்வளம் கொண்டவர்களை திரைத்துறையில் அறிமுகம் செய்யும் முயற்சியில் இருந்தார். பேராசிரியர் ஓமண்ணக்குட்டி, சித்ராவின் பெயரை முன்மொழிய இவர் திரைப்பட பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.

சித்ராவின் திரைப்பட அறிமுகம்:-

இவர் எப்போதும் முழு நேரப் பின்னணி பாடகியாகும் எண்ணத்தில் இருக்கவில்லை. பள்ளியிறுதி வகுப்பில் இவர் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளை , பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார். அவரின் முதல் திரைப்படப்பாடல் வெளிவரும் முன்னரே அந்தப் பாடல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து இவருக்கு யேசுதாசுடன் பல மேடை நிகழ்ச்சிகளிலும், ‘தரங்கிணி’ பதிப்புகளிலும் பாடும் வாய்ப்புகள் சித்ராவிற்கு வந்தன. தரங்கிணிக்கு வந்த இசையமைப்பாளர்கள் சின்னக்குயிலின் குரலால் ஈர்க்கப்பட்டனர். இதன் பின்னர் அவரை நாடி வாய்ப்புகள் தொடந்து வந்தன. இதனால் இவர் திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்கு வந்து குடிபெயர்ந்தால் கணக்கற்ற வாய்ப்புகள் பெற இயலும் என்று இசையமைப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து சித்ராவிடம் வலியுறுத்தி வந்தார்.

சித்ராவின் சென்னை வருகை:-

சித்ரா முதலில் முகமறியாத இடத்திற்கு வர விரும்வில்லை. ஒரு முறை ‘குஷி ஒளர் குஷி’ என்ற ஹிந்தி திரைப்படத்திற்கு பாடல் ஒன்றை பாட சென்னை வந்திருந்தார். எஸ்.பி.வெங்கடேஷ் எழுதிய ஒரு பாடலை பி.பி.சீனிவாசுடன் இணைந்து பாடினார். ஆனால் அந்தத் திரைப்படம் வெளியிடப்படவில்லை.

சித்ராவின் இளையராஜாவுடனான அறிமுகம்:-

ஒரு முறை தம்முடைய நோக்காத தூரத்து கண்ணும் நட்டு என்ற வெற்றிப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்ய இயக்குனர் பாசில் விரும்பினார். இளையராஜா அத்திரைப்படத்தை பார்த்ததும் சித்ராவிற்கு அழைப்பு விடுத்தார். இளையராஜாவின் இசையமைப்பில் நீ தானா அந்தக் குயில் என்ற திரைப்படத்தில் அவர் பாடிய ‘கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட‘, ‘பூஜைக்கேத்த பூவிது‘,என்ற இரு பாடல்களும் அவருக்கு இசையுலகிற்கான திறவுகோலாக அமைந்தன. 1985 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் ‘கீதாஞ்சலி‘ எனும் திரைப்படத்தில் சின்னக்குயிலிசை கேட்டு’, ‘துள்ளி எழுந்தது பாட்டு வைரமுத்துவின் வரிகளில் இவரின் காந்தக்குரல் ஒலிக்க இவர் பாடிய ‘ஒரு ஜீவன் அழைத்தது‘ ஆகிய பாடல்கள் வரலாற்று புகழ் பெற்றன. இதனைத்தொடர்ந்து இவருக்கு தமிழ்த் திரையுலகம் சூட்டிய சின்னக்குயில்சித்ரா‘ என்ற பெயர் நிலைத்தது. இவர் தான் அறிமுகமான அதே ஆண்டிலேயே ‘பாடறியேன் படிப்பறியேன்‘ , ‘நானொரு சிந்து காவடிச்சிந்து‘ போன்ற பாடல்களை சிந்து பைரவியில் மிகச் சிறப்பாகப் பாடி தேசிய விருதையும் பெற்றார். சித்ராவின் திறமையை வெளிக் கொண்டு வந்ததில் மிகப்பெரிய பங்கு இளையராஜாவையே சாரும்.

இளையராஜாவின் இசையமைப்பில் 1985-1986ஆம் ஆண்டுகளில், சித்ரா பாடிய ஏராளமான பாடல்கள் வெற்றியடைந்தன. இதையடுத்து ஏனைய இசையமைப்பாளர்களும் தம் பாடல்களுக்கு உயிரூட்ட சின்னக்குயில் சித்ராவின் குரலைப் பயன்படுத்தினர். சித்ராவுடன் தமிழில் முதலில் பாடிய கங்கை அமரன், சங்கர் – கணேஷ் மற்றும் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ஆகியோர் இசையமைப்பிலும் அநேக பாடல்கள் பாடியிருக்கிறார் சித்ரா.

சித்ராவின் மற்ற இசையமைப்பாளர்கள்:-

இசையமைப்பாளர் சந்திரபோசின் இசைக்கு எண்பதுகளின் பிற்பகுதியில் மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. இவரின் இசையில் வெளியான ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு‘, ‘வண்ணாத்திப்பூச்சி வயசென்னாச்சு’ , சின்னக்கண்ணா செல்லக்கண்ணா, ‘பூ முடிக்கணும்‘ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்புகள் சித்திராவிற்கு கிடைத்தன.மேலும் எஸ்.பி.பியுடன் இணைந்து வி.குமாரின் இசையமைப்பில் ‘பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பூவெல்லாம்‘ என்ற அரிய பாடலை பாடினார். இதனையடுத்து இவர் குன்னக்குடி வைத்யநாதனின்உலா வந்த நிலா’ திரைப்படத்தில் சில அரிய பாடல்களையும், டி.ராஜேந்திரனின் இசையில் சில பாடல்களையும் பாடியுள்ளார். காலப்போக்கில் சித்ராவிற்காக காத்திருந்து சில இசையமைப்பாளர்கள் தம் படங்களில் பாடும் வாய்ப்பளித்தார்கள். ஆர்.டி.பர்மன் (நதியே நதியே நைல் நதியே என்ற பாடல் ) , பப்பி லஹரி (தக்கதிமிதானா என்ற பாடல்) , லட்சுமிகாந்த் பியாரிலால் (அச்சமில்லா பாதையில் என்ற பாடல்) , வி.எஸ். நரசிம்மன் (விழிகளில் கோடி அபிநயம் என்ற பாடல்) , எல்.வைத்யநாதன் (என்னை விட்டுப் பிரிவது நியாயமாகுமா என்ற பாடல்) , தேவேந்திரன் (புத்தம்புது ஓலை வரும், கண்ணுக்குள் நூறு நிலவா) , ஹம்சலேகா (சேலை கட்டும் பெண்ணுக்கொரு , ராக்குயிலே கண்ணிலே என்னடி கோபம்) , எம்.ரங்காராவ் (குடும்பம் ஒரு கோயில் ) என்ற பாடலையும், மனோஜ் – க்யான் (சின்னக்கண்ணன் தொட்டது பூவாக, கண்ணா நீ வாழ்க, உள்ளம் உள்ளம் இன்பத்தில் துள்ளும், அழகில் சொக்காத ஆண்களே) என்ற பாடல்களையும், பாக்கியராஜ் (அம்மாடி இது தான் காதலா) என்ற பாடல், எஸ்.பி.பி இணைந்து (இதோ என் பல்லவி இஉன்னைக் கண்ட பின்பு தான்) என்ற பாடல்களையும் எஸ். ஏ. ராஜ்குமார் (ஆயிரம் திருநாள்) என்ற பாடல் , தேவா (சந்திரலேகா,வேண்டும் வேண்டும்) எனும் பாடல்கள் அவரின் பன்முகத்திறமைக்கு விருந்துணவாக அமைந்தன எனலாம்.

அடுத்து தொடர்ந்த பத்தாண்டுகளில் இசையரங்கில் ஏ. ஆர். ரகுமான், சிற்பி, மரகதமணி, வித்யாசாகர், பரத்வாஜ் போன்றவர்களின் வருகையினையடுத்து இசையின் பரிமாணத்தில் பல்வேறு விதமான அற்புதமான மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. இதன் பிரகாரம் இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சித்ராவின் குரலில் ‘என் மேல் விழுந்த மழைத்துளியே‘, ‘புத்தம்புது பூமி வேண்டும்‘, ‘தென் கிழக்குச் சீமையிலே‘,’எங்கே எனது கவிதை’ , ‘கண்ணாளனே‘, ’ஊ லலலா’ போன்ற பல வெற்றிப்பாடல்களை வழங்கினார்

சின்னகுயிலின் இசைப்பயணத்தில் இசையமைப்பாளர் மரகதமணியும் ஒரு மைல் கல்லாக என்றே கூறவேண்டும். ‘அழகன்’ என்ற திரைப்படத்திற்கா தாம் ‘தத்தித்தோம்‘ என்ற பாடலை பாடினார். மேலும் அவர் இயக்கத்தில் ‘நீ ஆண்டவனா?’, ‘நாடோடி மன்னர்களே‘, ‘கம்பங்காடே‘ போன்ற பாடல்களையும் பாடினார். ‘தேவராகம்‘ என்ற இரு மொழிப்படத்துப் பாடல்களும் ,’உயிரே உயிரே’ என்ற பாடலும்,அவருக்கென்றே இசையமைக்கப்பட்டவை.

பாலபாரதி (உன்னைத் தொட்ட தென்றல்) என்ற பாடல், ஆதித்யன் (ஒயிலா பாடும் பாட்டிலேஇ வெள்ளி கொலுசு ஜதி போடுதே) எனும் பாடல்கள், மஹேஷ் (பூங்குயில் பாடினால்) என்ற பாடல் ,சிற்பி (கன்னத்துல வை, ஐ லவ் யூ ஐ லவ் யூ, தென்றல் தென்றல் தென்றல் வந்து) எனும் பாடல்களும் , ரஞ்சித் பாரோடு (மின்னல் ஒரு கோடி) என்ற பாடலும் , ஆகோஷ் (முந்தானை சேலை , தொலைவினிலே) , வித்யாசாகர் (பாடு பாடு பாரத பண்பாடு , அன்பே அன்பே நீ என் பிள்ளை, அடி ஆத்தி , நீ காற்று நான் மரம்) , போன்ற இனிமையான காதல் சொட்டும் பாடல்களையும் , பரத்வாஜ் (வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே , ஒரு பூ வரையும் கவிதை இ உன்னோடு வாழாத , ஒவ்வொரு பூக்களுமே) , ரமேஷ் வினாயகம் (காதலை வளர்த்தாய்) , என்ற பாடல் , எஸ்.ஏ.ராஜகுமார் (இன்னிசை பாடி வரும் , தொடு தொடு எனவே) போன்ற ஏனைய இசையமைப்பாளர்களின் இசையில் சித்ரா பாடிய பாடல்களில் இவைகளும் சில.
கேரளாவிலிருந்து வந்து , தென்னிந்தியாவில் பி. லீலாவிற்குப் பிறகு இருபது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி மலையாளம் , தெலுங்கு , கன்னடம் , மலையாள மொழிகள் நான்கிலும் பாடியிருக்கிறார். ஹரிஹரன் , உன்னிகிருஷ்ணன் , ஜெயச்சந்திரன் , எஸ்.பி.பி , மனோ என்று முன்னணி பாடகர்களுடன் இணைந்து பாடி வாலி , பழனி பாரதி , வைரமுத்து , பா. விஜய் போன்றவர்களின் வரிகளை தம் குரலால் உயிர்ப்பித்திருக்கிறார்.

பிரளயம்‘ திரைப்படத்தில் தெலுங்கில் சித்ராவை அறிமுகப்படுத்திய கே.வி.மஹாதேவன் ‘பிரணதி பிரணதி’ என்ற பாடலை ‘ஸ்வாதி கிரணம்’ என்ற திரைப்படத்தில் எஸ். பி. பியுடனும் , தவாணி ஜெயராமுடனும் பாடும் அரிய வாய்ப்பை இவரக்கு ஏற்படுத்தி கொடுத்தார். இதனையடுத்து இவர் எஸ்.பி.பி , கீரவாணி (மரகதமணி) , இளையராஜா போன்றவர்கள் அவரை தெலுங்கில் பல அற்புதமான பாடல்களைப் பாட வைத்தார்கள். முதலில் இவர் மொழி அறியாது அவர் சற்று சிரமப்பட்டாலும் எஸ்.பி.பி மொழியை பொருளோடு புரியவைத்து உச்சரிக்கும் முறையை சுட்டிக் காட்டியபொழுது கற்றுக் கொண்டார். அனைவரும் பாராட்டும் வண்ணம் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் போன்றே அம்மொழிப் பாடல்களையும் மிகச் சிறப்பாக பாடினார்.

சித்ராவின் ஹிந்தி பாடல்கள்:-

சித்ரா பாலிவுட்டிலும் பல இந்திப் பாடல்களைப் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஆனந்த் மிலிந்த் ‘ப்ரேம’ என்ற தெலுங்கு படத்தை ‘லவ்’ என்ற பெயரில் தயாரித்த பொழுது , இளையராஜாவின் பாடல்களைப் பின்பற்றி இசையமைத்து சித்ராவையும் , எஸ்.பி.பியுடன் இணைந்து பாட வைத்தனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அநேகமான ஹிந்தி மொழிப்படங்களில் அவரைப் பாட வைத்தார். ராஜேஷ் ரோஷன் , அனு மாலிக்இ நாதீம் ஷ்ரவண்இ நிகில் வினய்இ இஸ்மாயில் தர்பார் போன்ற இசையமைப்பாளர்கள் அந்த காலகட்டத்தின் மிகச் சிறந்த பாடகி என்று சித்ராவிற்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். மேலும் லதா மங்கேஷ்கரின் எழுபத்தைந்தாம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது அந்தேரியில் நடந்த பிரம்மாண்டமான பாராட்டு விழாவில் லதா மங்கேஷ்கர் கேட்டுக் கொண்டதற்கேற்ப சித்ரா ‘ரசிகா பல்மா’ பாடலைப் பாடி விழாவைத் ஆரம்பித்து வைத்தார்.

சித்ரா பல வருடங்கள அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியில் முன்னணிக் கலைஞராக இருந்ததோடு ஒரிய, வங்காள , பஞ்சாபி மொழியிலும் அநேக பாடல்கள் பாடியுள்ளார். இவரின் குரலில் வெளிவந்த திரையிசை அல்லாத ஆல்பங்களும் ரசிகர்களிடையில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. அவர் சாரங்கி வித்வான் உஸ்தான் சுல்தானுடன் இணைந்து வெளியிட்ட ‘பியா பசந்தி’ என்ற தொகுப்பும் , சலீம் சுலைமானுடன் இணைந்து ‘ராக ராகா’ என்ற இண்டிபாப் தொகுப்பும் , விற்பனையில் சாதனை படைத்ததுடன் எம். டி.வி விருதையும் இவருக்கு பெற்றுத் தந்தன.

சித்ராவின் மலையாள பக்திப்பாடல்கள்:-

இவர் பக்திப்பாடல்களையும் ஏராளமாக பாடியுள்ளார். அந்தவகைளில் அவர் தனது தாய் மொழியான மலையாளத்தில் பல பக்திப்பாடலகளை பாடியுள்ளார். திருவிழாக் காலங்களில் கேரளக் கோவில்களில்; அப்பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. இசையமைப்பாளர் ‘சலீல் சௌத்ரி’ யின் இசையமைப்பில் உண்ணி மேனனுடன் இணைந்து சித்ராவும் ‘ஸ்வர்ணரேக’ என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளனர். தமிழில் சுவாதித் திருநாளின் பதங்களின் தொகுப்பான ‘என்சாண்டிங் மெலடீஸ்’ என்ற பாடலும் , ‘அன்னை மூகாம்பிகையே’ என்ற தொகுப்பும் , வெளி வந்துள்ளன. எம். சுப்புலட்சுமியின் நினைவிற்கு ஒரு அஞ்சலியாக ‘மை டிரிபியூட்’ என்னும் தொகுப்பில் எம்.எஸ் பாடி அமரத்துவம் பெற்ற ‘பாவயாமி ரகுராமம்’ , ‘குறை ஒன்றும் இல்லை’ , ‘காற்றினிலே வரும் கீதம்’ போன்ற பாடல்களைப் பாடியதோடு ‘சுனாமி’ வெள்ள நிவாரண நிதிக்காக உஷா உதூப்பின் இசையில் ‘வி பிலீவ் இன் நவ்’ என்ற தொகுப்பிலும் பாடியுள்ளார்.

சித்ராவின் இருப்பிடம்:-

இவர் சாலிகிராமத்தில் தன் கணவர் விஜய ஷங்கருடன் வசித்து வருகிறார். கணவர் ஒரு பொறியியல் வல்லுனர். சித்ராவின் சகோதரர்கள்; பெற்றோரின் இறப்பிற்கு பின்னர் வெளிநாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வாழ்கிறார்கள்.

சித்ராவின் மகள்:-

திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த பெண் குழந்தையான நந்தனாவை 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று துபாயில் உள்ள ஒரு செயற்கை நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார் .

சித்ராவின் விருதுகள்:-

சித்ரா தனது வாழ்நாளில் பல பல விருதுகளைப் பெற்றுள்ளார். நான்கு மாநில விருதுகளையும் பெற்றுள்ள ஒரே பின்னணிப்பாடகி இவர் மட்டுமே. (அதாவது தமிழ் நாடு , கர்நாடகா , கேரளா , ஆந்திரா விருதுகளை ) . 1985ஆம் ஆண்டில் ஆரம்பித்து பதினைந்து முறை கேரள மாநில விருதைப் பெற்றுள்ளார். ஆறு முறை ஆந்திர மாநில நந்தி விருதுகளையும் , கர்நாடக மாநில விருதுகளை இரண்டு முறையும் , தமிழ் நாடு மாநில விருதுகளை நான்கு முறையும் பெற்று விருதுகளுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு கலைமாமணி விருது 1995 ஆம் ஆண்டில் கிடைத்தது. ஆறு தடவைகள் இவருக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. தென்னிந்தியப் பின்னணியில் இருந்து இந்தி மொழியில் பாடி தேசீய விருது பெற்ற முதல் பாடகி என்ற சிறப்பை இந்தி படத்தில் ’பாயாலேன் சுன்முன் சுன்முன்’ பாடலின் மூலம் சித்ரா பெற்றார்.

மேலும் இவரின் இனிமையான குரலில் வெளியான இவரது ‘ஒவ்வொரு பூக்களுமே‘ பாடலை திருச்சிராப்பள்ளியில் ஒரு பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக்காக சிறுவர்கள் பாடுவதாகவும் , ஒரு பல்கலைக்கழகத்தில் பாடத் திட்டத்தில் இதுவும் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்பாடலுக்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் தனது இசைப்பயணத்தில் 12இ000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இவர் விஜய் யேசுதாஸ் , எஸ்.பி.சரண் முதலிய அடுத்த தலைமுறை பாடகர்களுடனும் பாடல்களை இணைந்து பாடியுள்ளார். இவர் மறைந்த குடியரசுத்தலைவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களிடமிருந்து 2005ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் ‘பத்ம ஸ்ரீ’ விருது பெற்றார்.
“எனக்குத் ஒரளவு சங்கீதம் மட்டுமே தெரியும். ஆனால் அந்த இசையே எனக்கு உயிர்” என்று கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *